




Sri Gnana Sai Industries.


எல்லாம் கைகூடும்
உலக நன்மைக்காக நமது சித்தர்கள் பலவிதமான எளிய முறையிலான பல நல்ல மூலிகைகளை இனம் கண்டு கொடுத்துள்ளனர். இவற்றை அன்றாட வாழ்வில் குடும்பத்தில் பயன்படுத்தி வரும்போது குடும்ப ஆரோக்கியத்தை பேணுவதோடு மட்டுமல்லாமல் சிறிது சிறிதாக நச்சு கலந்த இரசாயனப் பொருட்களிலிருந்து விடுபட்டு இயற்கை சார்ந்த வாழ்க்கை நலமும் பெற முடியும்.
இன்றைய காலகட்டத்தில் நல்லோர் பலர் இயற்கை சார்ந்த வாழ்க்கைக்குள் நமது தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில்கூட வந்த வண்ணம் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியே.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னலமற்ற சேவை உள்ளம் கொண்ட தொண்டர்களின் ஒரு கூட்டு சக்தியே ஸ்ரீ ஞானசாயி இண்டஸ்ட்ரீஸ். இந்த குழுமத்தோடு தாங்களும் இணைந்து …
தியானம் செய்யலாம்,
உடல்நலம் காக்க சிறந்த ஆசனங்கள் செய்யலாம்,
உலக நலத்திற்கான வேள்விகள் செய்யலாம்.
இதற்கு மேலும் ஒரு படியாக சீரடி சாய்பாபா திருக்கோயில் வேலூர் மாவட்டம் குருநாதபுரத்தில் அமைந்து கொண்டிருக்கின்றது. இத்திருப்பணிக்கு நேரடியாக தொண்டு செய்திடப் பங்கு பெறலாம்.
சீரடி சாய்பாபா திருக்கோயில், குருநாதபுரம், வேலூர் மாவட்டதில் அமைந்து கொண்டிருக்கின்றது.இங்கு
பௌர்ணமிதோறும் அன்னதானம்
பௌர்ணமிதோறும் கோ பூஜை
பௌர்ணமி மற்றூம் அமாவாசை அன்று
உலக சமாதான வேள்வி
மற்றும்
தியான வகுப்புகளும் நடந்து வருகின்றது.
இவைகளிளெல்லாம் தாங்கள் கலந்து கொண்டு பயன்பெறவும் அன்புடன் வேண்டுகின்றோம்.
நன்கொடை அளித்தல்.
ஸ்ரீ ஞானசாயி இண்டஸ்ட்ரீஸ்,. தயார் செய்து கொடுக்கும் மூலிகை தயரிப்புகள் அனைத்தும் 100 சதவீதம் ரசாயன சேர்க்கை இல்லாதது. இவற்றின் மூலம் கிடைக்கும் இலாபம் முழுவதும் குருநாதபுரம் சீரடி சாய்பாபா திருக்கோயில் இத்திருப்பணிக்கு பயன்பட உள்ளது.
இந்த மூலிகைப் பொடிகளை விற்பனை செய்வதால் தாங்களும் இந்த இத்திருப்பணிக்கு மறைமுகமாக தொண்டு செய்கிறீர்கள். எங்களது தயாரிப்புகளை வட்டாரவாரியாக விற்பனை செய்து தாங்கள் வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
தங்களது சேவையையும் தங்களையும் வரவேற்கிறோம்.
அனந்தமே ஜெயம்
எல்லாம் கைகூடும்





